
1. இது ஒரு போர்னோகிராபி வகையான திரைப்படம்.
2. கதைக்கரு அற்ற திரைப்படம்.
3. மேலைத்தேயப் பார்வையாளர்களுக்கு எமது ரணங்களை வியாபாரப் பொருளாக்குதலை நோக்கமாகக் கொண்ட திரைப்படம்.
உண்மையில் இந்தத் திரைப்படம் போர்னோகிராபி வகையைச்சார்ந்தது எனக் கூறுவது சரிதானா? நேரடியான உடலுறவுக் காட்சிகள் படத்தில இருக்கும் என்றால் அவை எல்லாம் போர்னோகிராபி என்று கூற முடியுமா? அப்படியென்றால உலக சினிமாவின் மிகச் சிறந்த இயக்குநர்கள் என்று கருதப்படுபவர்களில் பலர் போர்னோகிராபி இயக்குநர்களின் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய அபாயம் ஒன்று இங்கே உள்ளது.

சேகர் கபூரின் ‘பண்டிற் குவீன்’ திரைப்படத்தில் பிரதான பாத்திரம் வெட்டவெளி வறண்ட நிலத்தில் வைத்து வன் புணர்ச்சி செய்யும் காட்சி படமாக்கப்பட்டிருக்கும். நான் இந்தக் காட்சியை எனது பதினாறாவது வயதில் பார்த்திருக்கிறேன். அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் என் மனதில் உறைந்து கிடக்கின்றது. ஆனால் இக்கதாபாத்திரத்தின் உணர்வு நிலையைப் புரிந்து கொள்ளாமல் “அய்யோ! அய்யோ! கலி முற்றிவிட்டது. வன்புணர்ச்சியை திரைப்படத்தில் காட்டுகிறார்கள்.” என்று சொல்லி அதன் அரசியலுக்குள் புகமுடியாதவர்களால்தான் இந்தக் காட்சியை It’s very dark and Haunting என்று கூறமுடியும்.

இந்த சினிமா மொழியை புரிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கும், இன்னும் “நவீன ஓவியம் என்ன ஓவியம்? நானும்தான் வரைவேனே, துணிகையையும், துரிகையையும், வண்ணக்கலவைகளையும் தாருங்கள்” என விதண்டாவாதம் பேசுபவர்களுக்கும் நிச்சயம் இந்த சினிமா மொழி புதிரானது தான். சாப்ளின் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு வெறுமே சிரித்துவிட்டுப் போகும் பார்வையாளரின் மனோநிலை போன்றதே.


நம் மத்தியில் ஒரு படைப்பு சர்வதேச அங்கீகாரம் பெற்றுவிட்டாலோ அல்லது மேற்குலக மக்களால் பாராட்டப்பட்டாலோ நாம் உடனே இது மேற்குலகத்திற்கான படைப்பு, எமது ரணங்களைப் பெரிது படுத்திக் காட்டி நாம் சார்ந்த சமூகத்தை அவமானப்படுத்துகிறோம் என்று விமரிசனம் கூறிவிடுவோம். உண்மையில் நாம் எமது ரணங்களை மூடிமறைத்து, சீழ்வடிய வைத்தாலும் வைப்போமேயன்றி, அதற்கு மாற்றுகளை எப்போதுமே தேடியதில்லை.
பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டிக் காத்துவந்த கலாச்சாரம் என்னாவது?
அது வெளியில் தெரிந்தால் எம் கவுரவம் என்னாவது?
நாம் தீக்குளித்தும் நகரத்தை எரித்தும் எம் புனிதத்தன்மையைக் காத்துக்கொள்வோம்.
சினிமா பல தளங்களைக் கடந்து பல சோதனை முயற்சிகளைக் கடந்து பல வெற்றிகளைக் கண்டு நம்முன் பல விம்பங்களை விட்டுச்சென்றிருக்கிறது.
ஆனால் நாம் இன்னும் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கத் திரைப்படங்களைத் தேடுகின்றோம். தமிழ்த் திரைப்படங்களில் தொப்புளை tight closeup இல் ஆட்டிக்காட்டும்போது பூரித்துப் போகிறோம். பாடல் காட்சிகளில் உடலுறவுக்கன முத்திரைகள் போல் இடுப்பை இடுப்பை ஆட்டும்போதும், போர்வைக்குள் படுத்துக்கொண்டு ஆளுக்கு மேல் ஆள் புரளும் போதும் நாம் குடும்பத்தோடு இருந்து பார்ப்போம். சிறு பிள்ளைகளை அதைப் போன்று ஆடவைத்து ரசிப்போம்.
ஆனால் நாம் இன்னும் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கத் திரைப்படங்களைத் தேடுகின்றோம். தமிழ்த் திரைப்படங்களில் தொப்புளை tight closeup இல் ஆட்டிக்காட்டும்போது பூரித்துப் போகிறோம். பாடல் காட்சிகளில் உடலுறவுக்கன முத்திரைகள் போல் இடுப்பை இடுப்பை ஆட்டும்போதும், போர்வைக்குள் படுத்துக்கொண்டு ஆளுக்கு மேல் ஆள் புரளும் போதும் நாம் குடும்பத்தோடு இருந்து பார்ப்போம். சிறு பிள்ளைகளை அதைப் போன்று ஆடவைத்து ரசிப்போம்.

ஏனென்றால் அரசியல் பொருளாதார கருதுபொருள்கள் குறித்த விசாலமான பார்வையைக் கொண்டிருப்பவர்கள் கூட, கலாச்சாரம், பாலியல் போன்ற கருதுபொருள்களுக்கு வந்து சேருகின்றபோது மிக மோசமான பழமைவாத, பிற்போக்கு அம்சங்களையே வரித்துக்கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.
விமுக்தி ஜெயசுந்தர என்றொரு துரதிர்ஷ்டசாலி சில வருடங்களை புனே பிலிம் இன்ஸ்ரிரியூட்டில் கழித்து உதவி இயக்குநராக பணிபுரிந்து தனது முதல் சினிமாவுக்கே உலகின் சினிமா மேதைகள் அலங்கரித்த மேடையில் விருதைப்பெற்று நின்றதும், அவன் எந்த சமூகத்திற்காக தனது படைப்பைச் செய்தானோ, அதே மக்களால் புறக்கணிக்கப்பட்டு, விமரிசகர்களால் அவமானப்படுத்தப்பட்டு, படத்தைப் பார்க்காதீர்கள் என்று ஊடகங்களில் பகிரங்க அறிவித்தல் செய்யப்பட்டு, மிகக் கேவலமாகப் புண்படுத்தப்பட்டு இருக்கிறார்.

பிரதீபன் ரவீந்திரன் – என்வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம், Shadows of Silence குறும் படங்களின் இயக்குநர். ஈழத் தமிழர். தற்போது பிரான்ஸில் வாழ்கிறார்.
விமுக்தி ஜெயசுந்தர – புனே திரைப்படக் கல்லூரியில் படித்தவர். இலங்கையைச் சேர்ந்த இவர் தற்போது இருப்பது பிரான்ஸில்.
இவர் இயக்கிய திரைப்படங்களின் விவரங்களுக்கு:
http://www.imdb.com/name/nm1549797/