Tuesday 26 June 2007

குவாய்தானின் நான்கு கதைகள்.




* முதல் கதையான ' கறுத்த கூந்தல்' தன்னை மிகவும் நேசிக்கும் தன் மனைவியை பிரிந்து பணத்திற்காக செல்வந்தர் குலத்து பெண்ணொருத்தியை மணம் செய்துகொள்ளும் ஒரு சாமுராய் வீரனைப்பற்றியது. தனது குற்றத்தை பின்னர் உணரும் அவன் தன் பழைய மனைவியிடம் திரும்பி வருகிறான். மன்னிப்புக்கோரி இரவை மகிழ்ச்சியாக மனைவியுடன் கழிக்கிறான். ஆனால் காலையில் அவன் உணருவது ......



* பனிப்புயலில் சிக்கிக் கொள்ளும் இரு மரவெட்டிகளைப்பற்றியது 'பனிப் பெண் ' கதை. இருவரில் வயதான கிழவன் அந்த ஆவிப் பெண்ணிடம் சிக்கி இறக்க , அடுத வாலிபனுக்கு ஒரு நிபந்தனையுடன் உயிர்ப்பிச்சை கிடைக்கிறது. காலங்கள் கடக்க , அந்த நிபந்தனையும் மறக்கப்பட்டு விடுகிறது. அதன் விளைவோ .....



* கண் பார்வயற்ற ஒரு அற்புதமான பாடகனைப் பற்றியது 'காதற்ற ஹொய்ச்சி'யின் கதை. பழங்கால போர்களின் வீர தீர நிகழ்வுகளை பாடுவதற்காக அழைத்து செல்லப்படும் ஹொய்ச்சி, தன் பாடல்களை, அந்த போரில் இறந்தவர்களின் ஆவிகளுக்காக தான் பாடிக்கொண்டிருப்பதை அறியநேருகிறது. அந்த ஆவிகளிடமிருந்து ஹொய்ச்சியை காப்பதற்காக ஹொய்ச்சியின் குரு செய்யும் முயற்சியின் விளைவை காண்கிறோம்.


* ஒரு எழுத்தாளரைப் பற்றிய கதை 'ஒரு கோப்பை தேநீரில்'. இது முற்றுப் பெறாத கதை. கோப்பையிலுள்ள தேநீரிலிருக்கும் ஒரு ஆவியுடன் தேநீரைப் பருகியதன் விளைவாக நிகழும் நிகழ்வுகளை காண்கிறோம்

படம் : ஜப்பானிய மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன். நேரம் : 164 நிமிடங்கள்

இடம்: அஷ்வின் மருத்துவமனை கலையரங்கம், கணபதி, கோவை.

நேரம்: 01 07 2007 மாலை 5.45 மணிக்கு.

No comments: