
இயக்கம் : பிலிப் நோய்ஸ்
09 செப்டெம்பர் மாலை 5.45
அருணா திருமண மண்டபம்என்.எஸ்.ஆர் ரோடு,
சாய்பாபா காலனி, கோவை.
கோணங்கள் திரைப்பட சங்கத்தின் பக்கம்.
* முதல் கதையான ' கறுத்த கூந்தல்' தன்னை மிகவும் நேசிக்கும் தன் மனைவியை பிரிந்து பணத்திற்காக செல்வந்தர் குலத்து பெண்ணொருத்தியை மணம் செய்துகொள்ளும் ஒரு சாமுராய் வீரனைப்பற்றியது. தனது குற்றத்தை பின்னர் உணரும் அவன் தன் பழைய மனைவியிடம் திரும்பி வருகிறான். மன்னிப்புக்கோரி இரவை மகிழ்ச்சியாக மனைவியுடன் கழிக்கிறான். ஆனால் காலையில் அவன் உணருவது ......
* கண் பார்வயற்ற ஒரு அற்புதமான பாடகனைப் பற்றியது 'காதற்ற ஹொய்ச்சி'யின் கதை. பழங்கால போர்களின் வீர தீர நிகழ்வுகளை பாடுவதற்காக அழைத்து செல்லப்படும் ஹொய்ச்சி, தன் பாடல்களை, அந்த போரில் இறந்தவர்களின் ஆவிகளுக்காக தான் பாடிக்கொண்டிருப்பதை அறியநேருகிறது. அந்த ஆவிகளிடமிருந்து ஹொய்ச்சியை காப்பதற்காக ஹொய்ச்சியின் குரு செய்யும் முயற்சியின் விளைவை காண்கிறோம்.
* ஒரு எழுத்தாளரைப் பற்றிய கதை 'ஒரு கோப்பை தேநீரில்'. இது முற்றுப் பெறாத கதை. கோப்பையிலுள்ள தேநீரிலிருக்கும் ஒரு ஆவியுடன் தேநீரைப் பருகியதன் விளைவாக நிகழும் நிகழ்வுகளை காண்கிறோம்
படம் : ஜப்பானிய மொழியில் ஆங்கில சப் டைட்டில்களுடன். நேரம் : 164 நிமிடங்கள்
இடம்: அஷ்வின் மருத்துவமனை கலையரங்கம், கணபதி, கோவை.
நேரம்: 01 07 2007 மாலை 5.45 மணிக்கு.
(இடம் : கஸ்தூரி சீனிவாஸன் அரங்கம் . பீளமேடு , கோவை. மற்ற விவரங்களை இந்த அறிவிப்பின் இறுதியில் காணலாம். )
ரித்விக் கட்டக்
1925 – 1976
இந்திய சினிமாவின் மேகம் கவிந்த தாரகை இந்திய சினிமாவின் மிக வும் சக்தி வாய்ந்த கவிஞன் என்றால் அது ரித்விக் கட்டக்காகத்தான் இருக்க முடியும்.அதே நேரத்தில் தனி நபர் என்ற வகையில் இந்திய கலைஞர்களி லேயே மிகவும் புரிந்துகொள்ள முடியாத வருமாக விளங்கியவரும் ரித்விக் கட்டக்தான். சிலரின் பார்வையில் ரித்விக் கட்டக் ஒரு வினோத மேதை. ஆனால் அவர்கள் பார்க்கத் தவறுவது, கீழ்மட்ட ஏழை மக்களின் மீது அவருக்கிருந்த அன்பும் , அக்கறையும் ஆழமான நேசமுமாகும். இன்னும் சிலரின் பார்வையில் அவர் சோகம் மற்றும் நாடகத்தின் வல்லுநன். ஆனால் இவர்கள் தெரிந்து கொள்ளாதது அவரின் ஒவ்வொரு ஷாட்டின் பின்னாலும் உள்ள அன்னியமும் ஆழமுமான ஒழுங்கு முறையும் ஆகும். கட்டக் மிகவும் அடக்கமானவர். அதனால்தானோ என்னவோ ஒரு திரைப்பட இயக்குநர் என்ற முறையில் தன்னையோ , தன் படங்களையோ ஒருபோதும் விற்கமுடியவில்லை.
அதிர்ஷ்டவசமாக அவரின் மறைவுக்குப் பின்பாவது , இப்போது அவர் படைப்புகள் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன. உலகமெங்குமுள்ள ரசிகர்கள் எத்தகைய ஒரு இந்திய சினிமா மேதையை அவரின் சொந்த வாழ்நாளின் போது இழந்துவிட்டோம் என்பதை உணர்கின்றனர். ஆனால் வரலாற்றைப் பொறுத்தமட்டில் அவர், அவருக்கு மிகவும் பிடித்த அவரின் படத்தலைப்பு போல ' மேக டாக்க தாரா' வாக - மேகம் கவிந்த தாரகையாக - இருந்துவிட்டார்.
( நன்றி : சென்னை பிலிம் சொசைட்டி வெளியிட்ட 'ரித்விக் கட்டக்' நூலின் முன்னுரையில் இயக்குநரும் , ரித்விக் கட்டக்கின் மாணவருமான ஹரிஹரன் )
கட்டக் திரைப்பட விழாவில் அவரது புகழ்பெற்ற மூன்று திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
மேக டாக்க தாரா ( 1960)
இடம் : கஸ்தூரி சீனிவாஸன் அரங்கம் . பீளமேடு , கோவை.
தொடர்புக்கு : konangal@gmail.com
அனுமதி இலவசம்.
நேரம் : 17 06 2007 , ஞாயிறு காலை 9.45 மணி முதல் மாலை 6.30 மணி வரை
இருவேளை தேநீர் மற்றும் மதிய உணவுக்கு நன்கொடை ரூ.50 .
உங்களால் முடிந்த அளவு நன்கொடை கொடுத்து கோணங்களின் முயற்சிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மதிய உணவு வேண்டுவோர் இந்த எண்களில் தொடர்புகொண்டு முன்பே பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம். 9894871105 , 94430 39630
மொழி : போலிஷ் சப் டைட்டில் : ஆங்கிலம் படம் ஓடும் நேரம் :160 நிமிடங்கள்
நேரம் 03 06 2007 மாலை 5.45 மணி.
இடம்: அஷ்வின் மருத்துவமனை அரங்கம், சத்தி ரோடு, கணபதி, கோவை.தொடர்புக்கு : 9443039630 konangal@gmail.com
ஆந்த்ரே வாஜ்தா
ஆந்த்ரே வாஜ்தா 1926 ஆம் ஆண்டு போலந்தில் பிறந்தவர். வாஜ்தா, உலக சினிமா அரங்கிலும், கிழக்கு ஐரோப்பிய சினிமா தளத்திலும் முக்கிய இடத்தை வகிக்கும் இயகுநர் ஆவார்.தனது தாய் நாடான போலந்தின் அரசியல் , சமூக வரலாற்று நிகழ்வுகளை சினிமாவில் பதிவு செய்தார். இவரது தந்தை 1940 இல், போரில், சோவியத் படையினரால் கொல்லப்பட்டார். 1940 இல் தனது பதிநான்கு வயதிலேயே ஜெர்மானியர்களை எதிர்த்து போலந்தில் நடந்த போரில் பங்கேற்றார்.
போருக்குப்பின் ஒவியக்கலை பயின்ற வாஜ்தா, பின்னர் போலந்தின் பிரசித்திபெற்ற லாட்ஸ் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார். ரோமன் போலன்ஸ்கி. கீயெஸ்லாவ்ஸ்கீ, ஜான்னுஸி போன்ற புகழ் பெற்ற இயக்குநர்களை உலகுக்கு அளித்த பெருமை இக்கல்லூரிக்கு உண்டு.வாஜ்தாவின் முதல் சினிமா ' எ ஜெனரேஷன் ' 1955 இல் வெளிவந்தது. போரின் சீர்குலைவுகளை வெளிப்படுத்தும் முயற்ச்சியாக தொடர்ச்சியாக வாஜ்தா, மேலும் இரு திரைப்படஙளை - கனால் (1956). ஆஷஸ் அன்ட் டயமன்ட்ஸ் (1958) - இயக்கினார்.
போலந்தின் அரசியல் பிரச்சினைகள் வாஜ்தாவுக்கு பெரும் சோதனைகளை தந்த வண்ணமே இருந்தன. இவரது டான்ட்டன், கன்டக்டர், மேன் ஆப் ஐயர்ன், பிராமிஸ்ட் லேன்ட் போன்ற திரைப்படங்கள் கட்டாயம் பார்க்கப் படவேன்டியவையாகும். எண்பது வயதைத் தாண்டிய வாஜ்தா இன்னும் திரைப்பட இயக்க்த்திலிருந்து ஓய்வு பெறவில்லை.
மிக்லோஸ் யான்ச்சோ இயக்கியிருக்கும்
MY WAY HOME
பெப்ருவரி 16
மாலை 5.45
பெர்க்ஸ் மினி திரை அரங்கு
http://konangalfilmsociety.blogspot.in