Tuesday 28 August 2007

2, செப்டெம்பர் 2007 : மகேந்திரனின் ' உதிரிப்பூக்கள் ' திரையிடல்

உதிரிப்பூக்கள்
இயக்கம் : மகேந்திரன்
வருடம்:1979 ; தமிழ்
ஓடும் நேரம் : 143 நிமிடங்கள்
அஷ்வின் மருத்துவமனை கலையரங்கம் , கணபதி , கோவை
02 09 2007 ஞாயிறு மாலை 5.45
தொடர்புக்கு : 94430 39630

'உதிரிப்பூக்கள்' இயக்குநர் மகேந்திரனின் இரண்டாவது திரைப்படமாகும். இவரின் முதல் திரைப்படம் 'முள்ளும் மலரும்'. கிராமத்து பள்ளியின் தலைமைப் பொறுப்பிலிருக்கும் சுந்தரவடிவேலுவின் கதை அவனது முடிவு வரை ஒரு கவிதையாக இத்திரைப்படத்தில் வெளிப்படுகிறது. அவனது கொடூர குணத்தை நடிகர் விஜயன் அற்புதமாக சித்தரிதிருக்கிறார். அற்புதமான பாத்திரப் படைப்புகளும் , யதார்த்தமான நடிப்பும் இத்திரைப்படத்திற்கு மெருகேற்றுகின்றன.


தமிழ் திரையுலகிற்கு 75 வயதாகிறது. தமிழில் இதுவரை சுமார் 4200 திரைப்ப்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகப்பெரிய விஷயமாகும். ஆனால் இந்த 4200 திரைப்படஙளில் நல்ல சினிமாவுக்கான அடையளங்களுடன் வெளிவந்திருப்பவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம்.அதிகபட்சம் ஏழு அல்லது எட்டு திரைப்படங்களுக்கு மேல் சொல்ல முடியாது என்பது ஒரு நல்ல சினிமா ரசிகனுக்கு வேதனை தரும் விஷயம்.அத்தி பூத்தாற்போல அவ்வப்போது சில துணிவுள்ள இயக்குநர்கள் , பல தடைகளையும் மீறி நல்ல திரைப்படங்களை நம்க்கு தந்திருக்கிறார்கள். இவர்களுக்கு நாம் என்றென்றும் கடமை ப்பட்டிருக்கிறோம். மகேந்திரன் இந்தவகை இயக்குநர்.

மகேந்திரன்


மகேந்திரன் 1939 இல் தமிழ்நாட்டில் பிறந்தவர். 1992 வரை சுமார் 11 திரைப்ப்டஙளை இயக்கியுள்ளார். நல்ல , தனித்தன்மை வாய்ந்த இயக்குநர்கள், வியாபாரிகளால் நிறைந்திருக்கும் தமிழ்த் திரையுலகில் நிலைத்திருப்பது மிகவும் கடினம். 1992க்குப் பிறகு மகேந்திரனின் ஒரே படமான ' சாசனம்' இன்னும் சரியாக வெளிவராமல் இருக்கும் நிலையில், இந்த நல்ல இயக்குநர் தமிழ் திரையுலகில் சிறிது சிறிதாக மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வேதனைக்குரிய விஷ்யமாகும்

No comments: