Monday 16 April 2018

Wong Kar Wai என்ற ஜென் குரு - நிலவழகன் சுப்பையா


Wong Kar Wai என்ற ஜென் குரு
தமிழ்சினிமாவில்அழகியல்
காட்சி அழகியலில் நொண்டி அடிக்கும் தமிழ் urban சினிமா


ஒரே படம் என்னுடைய ஒட்டுமொத்த சினிமா பற்றிய பார்வையை தலைகீழாக புரட்டி போட்டதென்றால் அது ‘In The Mood For Love‘. இத்தனை வருடங்களில் அந்த படத்தின் காட்சிகளை பலமுறை திரும்பச்சென்று பார்த்திருக்கிறேன்,அது எப்படி இந்த சினிமா சாத்தியம் என்று பிரம்மித்து போயிருக்கிறேன்.அது ஒரு ஜென் துறவி எடுத்த படமாகத்தான் இருக்கவேண்டும் என தீர்க்கமாக நம்பினேன்.  

நாட்கள் கடந்தோட, அந்த படத்தின் ஒளிப்பதிவு மட்டும் என்னை விட்டு விலகிச்செல்லாமல் மீண்டும் மீண்டும் காட்சிகளை போய்ப்பார்க்க வைத்தது. Christopher Doyle பற்றி தேடித் தேடி படித்தபோது Wongன் பெரும்பாலான படங்களில் அவர்தான் ஒளிபதிவாளர் என்று தெரிந்தவுடன், ஆர்வத்தோடு அந்த படங்களை தேடி, Chunking Express பார்க்க அமர்ந்தேன். இன்னொரு மெதுவாக தியானித்து நகரும் படமாக இருக்க போகிறது என்று எதிர்பார்த்தால்,படம் ஓட ஆரம்பித்து ஒரு இருபது நிமிடத்தில் அவ்வளவு நாளாக தேடிகொண்டிருந்த முதல் காதலியின் முகத்தை கண்டடைந்தது போன்ற ஒரு பேரானந்தம். அது ஒரு ஜென் துறவி செய்த படம் போல இல்லை;மாறாக ஒரு kungfu சண்டைக்காரன் வானத்தில் எகிறி மண்டையில் அடித்த படம் போல இருந்தது.ஆச்சரியமோ ஆச்சரியம். எப்படி ஒரு இயக்குனர் ஜென் துறவி போலவும் அவதானிக்கிறான், kungfu சண்டைக்காரன் போலவும் சம்மட்டியடி அடிக்கிறான் யாரடா இவன்? என்று வாய்பிளந்ததுண்டு. அந்த படம் தந்த உணர்வெழுச்சியில் சிறிதாக கலங்கிப்போனேன். Styleற்காக அழவைத்த வெகு சில இயக்குனர்களில் Wongமுக்கியானவர்.

சரி இவருக்கு இருவேறு மனநிலை சாத்தியம் போல என்று அவரின் இன்னொரு படமான Fallen Angels பார்த்தபோதுதான் எனக்கு விளங்கியது. இவன் ஒரு ஜென் மனநிலை கொண்ட kugnfu சண்டைக்காரன் என்று.

https://www.youtube.com/watch?v=vHaAcaAOy-w

இந்த காட்சியை நாம் உடைத்து பார்ப்பதற்கு முன்பு, மெதுவாக தியானித்து தொடங்கும் அந்த shotsஐ கவனியுங்கள், அவன் செய்யப்போகும் ஒரு கொலையை நோக்கி காட்சி பயணிக்கிறது என்ற எந்த அறிகுறியும் இல்லாமல் மெல்ல ஒரு கவிதையைப்போல Wongற்கே உரித்தான அந்த styleஓடு நாம் மிதந்துகொண்டே இருக்கும்போது கடைசி முப்பது நிமிடம் பட் பட் பட் என்று துப்பாக்கி தெறித்து அதகளம் செய்து, மீண்டும் ஒரு ஜென் துறவியின் சாந்தத்தோடு காட்சி நிறைவுறும். இதுதான் wong.

Doyle என்ற தெய்வம்:

படத்தின் ஒளிப்பதிவாளர் Christopher Doyle ஒரு கலைஞன் மட்டும் அல்ல நெகிழ்ந்து போகக்கூடிய குழந்தை மனம் படைத்த மனிதன்.கலை என்பது நல்ல மனதில் இருந்துதான் பிறக்க முடியும் என்ற என் நம்பிக்கையை மேலும் வலுவாக்கும் ஒரு ஆத்மா. அவன் ஹாங்காங் மக்களோடு மக்களாக கலந்துவிட்டவன்.அந்த நிலப்பரப்பை தனதாக்கிக்கொண்டவன். அவன் பார்வையில் neon ஒளி விளக்கில் ஹாங்காங்கை பார்ப்பது அலாதியான அனுபவம்.Fallen Angels ஒரு extreme wide ல் செய்யப்பட்ட படம். அவர்கள் வாழும் குறுகிய அறைகள், தெருக்கள், இவைகளில் அந்த கதாபாத்திரங்கள் எவ்வாறு தனித்து இருக்கின்றன என்பதை, இந்த 14mm லென்ஸ் தரும். சற்றே இழுக்கப்பட்ட(Skewed) கோணத்தை வைத்து காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதும்,அதுவே அழகியல் தேர்வாக (Aesthetic choice) படம் முழுக்க ஆகிவிட்டதும் அருமை.இந்த இறுதி காட்சியை பாருங்கள், அவளின் உலகம் எவ்வளவு தனிமையும் ஏக்கமும் நிறைந்தது என்பதையும் அவள் நம் அருகாமையில் இருந்தாலும் விலகியே இருக்கிறாள் என்ற உணர்வை பரிமாற இந்த 14mm extreme wide தரும் கோணம் தான் காரணம் 

https://www.youtube.com/watch?v=T0d5-ge8KmY

wongஒரு visual கவிஞன். அவன் வடிப்பது கதைகளை அல்ல visual கவிதைகளையே.Chunking Express ஒரு கதையில் தொடங்கி அனாமத்தாக வேறொரு கதைக்கு மாறி பயணிக்கும்.கதை நிகழும் அந்த இடமும் சூழலும் தான் Wong சொல்ல வரும் கதையே தவிர பாத்திரங்களுக்குள் இருக்கும் உறவும் முரண்களும் இரண்டாம்பட்சமே. இங்கிருந்துதான் அவனுக்கான திரைமொழி உருவாகிறது.அவன் இடவெளியில்(Space) இருந்ததுதான் கதைகளை சொல்கிறான்.ஒரு கதையை எழுதி ஒப்புக்காக ஒரு இடத்தில் நிகழ்த்துவதில்லை.ஹாங்காங் தான் களம், அந்த மாநகரத்தின் வண்ணமும் ஒளியும்தான் படத்தின் வண்ணமும் ஒளியும். Wong-ற்கென்று திரைமொழி என்ற சில வரையறைகள் இருந்தாலும் அது படத்துக்கு படம் வேறுபாடும். Chunking Expressல் நிறைய காட்சிகள் Long lensல் செய்யப்பட்டு இருக்கும்.படம் முழுக்க முகங்கள்,முகங்கள்,முகங்கள்... அதே நேரத்தில் சட்டென ஒரு wideற்கு செல்ல அவனுக்கு எந்த தயக்கமும் இருப்பதில்லை! எந்த விதியின் படியும் அவன் விளையாடுவதில்லை. உணர்வுகள் ஒன்றே அவனை உந்திச்செல்லும் விதி.

Wongன் ஒவ்வொரு frame-ம் பிரம்மிக்க வைக்க காரணம் அவன் அந்த நகரத்தை முழுவதுமாக உள்வாங்கி உள்ளான். இரவுகளில் அதன் வானம் எவ்வாறு உள்ளது,ஒளியை சாலைகளும் சுவர்களும் எவ்வாறு எதிரொளிர்கின்றன என்பதெல்லாம் அவனில் ஒரு பகுதியாக கலந்து விட்டது. கூடுதலாக ஒளிப்பதிவாளர் Doyle-லும் Honkongநகரத்தில்  ஒருவனாகே மாறிவிட்டதால் அவருடைய படங்கள் ரத்தமும் சதையுமாக பரிமாறப்படுகிறது. doyleஹாங்காங்கின் neon விளக்குகளை கையாண்ட விதம் wongன் அனைத்து படங்களிலும் ஒரு அழகியல் கூறாகவே அமைந்துவிட்டது. இதைப்பற்றி doyleபேசிய இந்த கோப்பு தவறாமல் பார்க்க வேண்டிய ஒரு பொக்கிஷம்.

https://www.youtube.com/watch?v=97GwbI27w10&t=359s


Wong தன்னுடைய visual narrative-ஐ ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் மூலாமாக அடைகிறார் என்பதே என்னுடைய புரிதல். ஒளிப்பதிவு எல்லாவற்றிற்கும் அடித்தளமாக இருக்கிறது. அவர்கள் ஒவ்வொரு கட்சியையும் எவ்வாறு அதீத சிரத்தை எடுத்து அமைக்கிறார்கள் என்பது நாம் படிக்க வேண்டிய பாடம். இந்த கானொளியில், In the mood for love ல் வரும் ஜன்னல் காட்சியை எவ்வாறு தற்செயலாக அமைத்தார் என்பதை doyleவிளக்குவதை கவனியுங்கள். அவர்கள் எவ்வாறு அந்த கால இடவெளியில் இறங்கி அதை புரிந்து சினிமா என்ற கலைக்கு மிக அருகில் வேலை செய்கிறார்கள் பாருங்கள்.அவர்களுக்கானமொழி படிப்படியாக தனித்துவமாக அந்த நொடி, அந்த இடம் அந்த ஒளியில் தீர்மானிக்கப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=iDMRB5cCrzY

4.17 ல் Doyle தன் காமெராவை கையில் வைத்துகொண்டு பம்பரமாக சுற்றிக்காட்டுகிறார் அவரின் அந்த handheld வித்தைகள் உலகப்புகழ் பெற்றவை. அதில் அவர் rhythm பற்றி குறிப்பிடுவது முக்கியம். நான் முன்னரே சொன்னது போல பெரும்பாலும் Wong படங்களின் இருக்கும் rhythm-ற்கு இவரின் காமெரா நகர்வுதான் அடிப்படை.
7.09 ல் பாங்காக் தெருக்களில் பாலியல் தொழிலாளிகள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் இருக்கும் neon ஒளியைப்புரிந்து அதற்கேற்ப எவ்வாறு தங்களுடைய ஒப்பனைகளை அமைத்துக்கொள்வதை எடுத்துக்காட்டி, வண்ணங்களைப் பற்றிய புரிதல் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம் என்கிறார். ´உற்றுநோக்குதல் தானே கலையின் ஊற்றுக்கண்´. அதில் இன்னொரு முக்கியமான விடயத்தை குறிப்பிடுகிறார். ´Cinematography is how a colour suggests certain emotion‘ ஆம் வண்ணங்கள் , காமெராவின் frame, அதன் நகர்வு இதெல்லாம் சேர்ந்தது தான் ஒரு சினிமா தன்னுடைய திரைமொழியை தகவமைத்துகொள்கிறது. 

ஒவ்வொரு காட்சியின் ஒளிச்சட்டகம் (Frame) அமைவது அந்த கதை நிகழும் அறைகளும் அந்த நிலப்பரப்பின் அளவீடுகளுக்குள்ளும் என்பது தெரிந்ததே. Wongன் படங்கள் ஹான்காங் புறநகரில் நெரிசல் மிகுந்த சிறிய அளவிலான அறைகளை கொண்ட குடியிருப்புகளில் நிகழ்பவை. அந்த குறுகிய இடவெளியில் எவ்வாறு doyleதன்னை வருத்தி, குனிந்து, வளைந்து, படுத்து எப்படியெல்லாம் படம்பிடிப்பார் என்று விவரிக்கும் இந்த காட்சி ரசிக்கத்தக்கது.

https://www.youtube.com/watch?v=yGgSaqInamM

ஒரு கலைஞன் எவ்வாறு உருவாகிறான். அவன் செய்யவேண்டிய ஆயத்தங்கள் எவை, அவன் வாழ்கை எவ்வாறு கலையோடு ஒட்டி இருக்கவேண்டும் என்று Doyle மணிக்கணக்கில் பேசியுள்ள ஆவணங்கள் இணையம் முழுக்க கொட்டிக்கிடக்கின்றன. இந்த பேட்டி அதன் அனைத்து சாராம்சங்களையும் உள்ளடக்கியவை. இதில் ஒன்றிலிருந்தே அவரின் ஒளிப்பதிவு பற்றிய தத்துவங்களை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

https://www.youtube.com/watch?v=kQCkBV6rRcA&t=345s

Wongன் தியானித்து நகரும் எடிட்டிங்:

நன்கு கவனித்தீர்கள் என்றால் Wongன் எடிட்டிங் style எப்போதுமே doyleல் காமெரா நகர்வில் இருந்துதான் பெறப்படுகிறது. doyleஒரு இருப்புக்கொள்ளாத ஆள். அவர் ஒரு இடத்தில் நிற்காமல் நடனம் ஆடிக்கொண்டே இருப்பார் அவரின் நடனத்தின் rhythm தான் பெரும்பாலான Wongன் படங்களில் எடிட்டிங் rhythm. எனக்கு மிகவம் பிடித்தமான இந்த காட்சியை பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=P503l1lKrqA

இங்கு Doyleஒரு அலைபோன்ற மிதவை நகர்வை காட்சி முளுக்க அமைத்துவிட்டார். அது பாத்திரங்களை நெருங்கியும் விலகியும் சென்று ஆட்டம் போட்டுக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக அவனை கடந்து செல்லும் பாத்திரங்களை Doyle விலகிச்சென்று பிடிக்கும்போது, அடுத்த காட்சிக்கு மாறுகிறது. இன்னொரு பாத்திரம் அவனைகிடக்கும் போது காமெரா மீண்டும் விலகிச்சென்று அவர்களை பார்க்கிறது. இரண்டு வாய்ப்புகள் இங்கு உருவாக்கப்படுகின்றன. அந்த இரண்டாவது கொலை நடக்கப் போகும் இடம் எப்படிப்பட்டது என்ற சூழல் அவனை விட்டு ஒவ்வொருமுறை விலகிச்செல்லும் போதும் புரியவைக்கப்பட்டு விட்டது. அவன் எவ்வாறு அசூகையாக அந்த கொலைகளை செய்கிறான்? என்பதும். அவன் அவனை கடந்து செல்பவர்களால் எவ்வளவு விரும்பப்படுகிறான்? என்பதும். அதை வைத்தே எந்த இடங்களிலும் சிரித்துக்கொண்டே புகுந்து கொலைசெய்கிறான் என்பதும் சரியாக கடத்தப்பட்டு விட்டது. அங்கே நாயகன் மட்டும் பாத்திரமில்லை. அந்த இடத்தை நிரப்பி வாழும் ஏனைய மனிதர்களையும் அந்த காட்சியில் சேர்ப்பது,அவர்களை வைத்தே edit-ஐ நகர்த்துவது. இதெல்லாம் நான் பிரெஞ்சு new wave சினிமாக்களில் பார்த்திருக்கிறேன். Fallen Angels, Chunking Express, Happy Together இவை மூன்றும் நேரடி Goddard பாதிப்புகளில் எடுக்கப்பட்டவை என்பது உண்மையே. முக்கியமாக Fallen Angels ஒருபடி மேலே போய் Breathless உருவாக்கிய அந்த jump cut அழகியலை விஞ்சிச்சென்றிருக்கும்.மீண்டும் மீண்டும் இந்த காட்சியை பார்த்துக்கொண்டிருக்கிறேன் கேமரா அவனை விட்டு நகர்ந்து வேறொரு முகத்தில் போகும் போதெல்லாம் ஒரு கட். அட அட அட... இப்படியும் கூட editற்கான rhythm பிடிக்கப்படலாம் என்பது சிந்திக்கவைக்கிறது. கேமெராவின் அலைபோன்ற ஆட்டம், நகர்வு, விலகிச்செல்லல் இதைவைத்தே edit செய்தது Jump cut வரலாற்றில் ஒரு செவ்வியல் நேர்த்தி.
 

https://www.youtube.com/watch?v=01E5otZCpqw

எடிட்டிங்கில் ஒவ்வொருபடத்திலும் வேறுவேறு உத்தி பயன்படுத்துவதுதான் Wong அணுகுமுறை. Wong என்னுடைய இதயத்தின் உள்ளே சென்றது அவனுடைய soundtrack montagesஐ வைத்துதான். அவன் ஜென் குரு மனநிலையில் செய்த montageகள் நம்மை வேறு உலகத்திற்கு எடுத்து சென்று விடும். அந்த இசையின் ஓசைகளையும் அசைவுகளையும் சரியாக தன்னுடைய எடிட்டிங்கில் பயன்படுத்துவான். அவனுடைய காட்சி தேர்வுகளும் அந்த இசைக்கு ஏற்றார்போல் கச்சிதமாக பொருந்தும். நான் அவனுடைய பல படங்களை இருட்டு அறையில் தனித்து பார்த்த போது என்னையே மறந்து போய் இருக்கிறேன். இந்த பாடலில் Tonyயின் முகத்தில் அணைந்து அணைந்து ஒளிரும் விளக்கைப்பாருங்கள். அது இசைக்கு எவ்வாறு ஒத்துளைக்கிறது என்பதை கவனியுங்கள்.

https://www.youtube.com/watch?v=863Yzl5l2NM

இந்த montage கவித்துவத்தின் உச்சம். இந்த படத்தின் ஆரம்பமும் முடிவும் இதுதான், ஒரே காட்சிதான். ஒரே இசைதான். ஆனால் ஆரம்பத்தில் ஒரு உணர்வையும்... அதே காட்சி படத்தின் உள்ளே சென்று வந்த பின்பு முற்றிலும் வேறு ஒரு உணர்வையும் தரும். wongஇசையில் லயித்துகிடந்தவானாகத்தான் இருக்க வேண்டும். இப்போதெல்லாம் நான் அவன் தேர்வு செய்த கலைஞர்களை தொடர்ந்து போய் புதிய புதிய இசைகளை கண்டடைந்து வருகிறேன். படங்களைத்தாண்டியும் அவனிடம் கற்க நிறைய உள்ளது.

https://www.youtube.com/watch?v=1NnK77cc8v0
இந்த காட்சி  வரும்போது    இசைக்கோர்வை. அந்த அருவி எங்கேயோ நம் மனதிற்குள்ளேயே ஊற்றுவது போல் ஒரு உணர்வு. யப்பா எங்காய்யா இருக்க!!! அந்த காலை காட்டு தெய்வமே.

https://www.youtube.com/watch?v=09i5JpuZf5U
இது wongஉலகப்புகழ் பெற காரணமாக அமைந்த இரண்டு தங்க நிமிடங்கள், அவர் உன்னத ஜென் குருவாகவே மாறி செய்திருந்த காட்சி. ஓராயிரம் முறை பார்த்தாலும் திகட்டாது. இதுபோன்ற இன்னொரு காட்சியோ இரண்டு நிமிடங்களோ என்னை பாதித்தது இல்லை. கலை கலை கலை!

https://www.youtube.com/watch?v=HzUdtdz2pmY
Wong-இடம் அவதானித்த முக்கியமான ஒரு உத்தி. ஒரு காட்சி ஒரு உணர்வை உருவாக்கும், அது நம்மை ஏதோ ஒரு நிலையில் கொண்டு சேர்க்கும். அப்படி ஒரு உணர்வு நிலையில் நாம் அவனோடு மேலெழும்பி வந்துவிட்டால்,அதை அவன் பொக்கிஷமாக மதிக்கிறான். நம் உணர்வுகளை மத்தித்து அங்கேயே நம்மை சற்று நேரம் ஆழ்ந்திருக்க வைக்கிறான்.அடுத்த காட்சியை திணித்து நம் உணர்வுகளை அவமதிப்பதில்லை.

Wongன் காட்சி அழகியலும்  சினிமாவை அணுகும் பாங்கும் ஒருவேளை   அவருடைய  நாட்டின் தத்துவ மற்றும் போர்முறை மரபுகள் தரும் ஒரு மனநிலையில் இருந்து வருகிறதோ என்ற எண்ணமும் எனக்கு உண்டு. எதுவாக இருப்பினும் அவர் ஒரு கவிஞன். அவர் ஒரு கலைஞன். Wongதன்னுடைய பின்புலம் , சினிமா பற்றிய பார்வை, வாழ்வியல் , சினிமாவின் தத்துவங்கள் பற்றி பேசிய ஏராளமான பேட்டிகள் இணையம் எங்கும் விரவிக்கிடக்கிறது. இந்த பேட்டி அவரைப் பற்றி தெரிந்தது கொள்ள நல்ல தொடக்கமாக இருக்கக்கூடும்.

https://www.youtube.com/watch?v=7rXZCuo2MVQ

wongசெய்த urban சினிமா தனித்துவமானது. அது அவன் நகரத்தை உள்ளிருந்து வெளியாக நம்மிடம் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. இரவு நேர ஹாங்காங் எவ்வாறிருக்கும் ,அங்கிருக்கும் மனிதர்கள் எத்தகையவர், அவரின் வாழ்க்கை என்ன, அவர்களின் உலகம் எவ்வாறு தனிமையில் சிக்குண்டிருக்கிறது இவற்றை வெறும் கதைகளால் மட்டும் இல்லை. அந்த இட- காலவெளிக்குள் (Time and Space) நம்மை அழைத்து சென்று வாழவைக்கிறான். 

Wong தவிர்த்துவிடவே கூடாத படிக்கவேண்டிய சினிமாவின் முக்கியமான ஜென் குரு.


இவ்வளவு கதைகளையும் பேசியதற்கு காரணம், தமிழ் சினிமாவில் எனக்கு தெரிந்த வரை ஒரு உருப்படியான urban சினிமா கூட வரவில்லை. வெற்றிமாறனின் பொல்லாதவன் சரியான இடவெளியில்(Space) செய்யப்பட்டது. ஆனால் அது அரைகுறை நேர்த்தியான படம், குமாரராஜாவின் ஆரண்யகாண்டம் படத்தின் அளவு கருதி அது ஊருக்கு ஒதுக்குபுறமாக செய்யப்பட்டது, மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உண்மையிலேயே ஒரு நல்ல urban படம் ஆனால் அதில் சிக்கல் என்ன தெரியுமா நம்முடைய தெருக்கள் இன்னும் போதிய அளவிலும் நேர்த்தியாகவும் ஒளியூட்டபப்டவில்லை அதானால் மிஸ்க்கின் ஆங்காங்கே செயற்கை விளக்குகளை வைத்து நிரப்பி இருப்பார். அது ஏற்றுகொள்ளகூடியதே ஆனால் அது தனித்து தெரியும்.
நான் சொல்ல வருவது முழுமையான urban சினமா இன்னும் செய்யப்படவே இல்லை. சென்னையோ நம்முடைய வேறொரு நகரமோ ஒரு படத்தின் ஆரம்பத்தில் இரண்டு முக்கிய தெருக்கள் பாலங்கள் நினைவுச்சின்னங்களோடு சுருங்கி விடுகிறது என்பதே சோகமான உண்மை. நன்றாக சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்த, நீங்கள் தினமும் புழங்குகிற, நீங்கள் உணவு உண்கிற, குடிக்கிற, பயணிக்கிற சென்னை ஏதாவது படத்தில் படம் பிடிக்கப்பட்டு உள்ளதா? சென்னையின் இரவும் பகலும் சரியாக படம் பிடிக்கபட்டு விட்டதா. அப்படி இருந்தால் பின்னூட்டத்தில் விவாதிக்கலாம் தெரிந்துகொள்ளவும் பார்க்கவும் ஆர்வமாக உள்ளேன்.
நம்முடைய நிலப்பரப்பு நகரமாயினும் சரி, கிராமமாயினும் சரி இன்னுமே சினிமாவில் விஸ்த்தரிக்கபடவே இல்லை. நம்முடைய வாழ்வியல் மேம்போக்காக மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது. நம் சினிமா வெறும் நுகர்பொருளாக மாறி பயனற்று போய்விட்டது. நம்முடைய எந்த சினிமாவையும் காட்டி “இதுதான் எங்கள் வாழ்க்கை” என்று சொல்லிக்கொள்ள ஒன்றிரண்டு படங்களைத் தவிர வேறெதுவும் இல்லாமல் போய் விட்டது. வீழ்ச்சி! வீழ்ச்சி! வீழ்ச்சி!
ஒரு பழைய பண்பட்ட சமூகத்தின் வீழ்ச்சிஎன்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

No comments: